மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் சம்பந்தம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், 185 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினர்.