districts

img

கூப்புளிக்காடு: பகுதிநேர அங்காடி திறப்பு

தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 16 ஆவது வார்டு கூப்புளிக்காடு  கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா, அதனைத் தொடர்ந்து 17 ஆவது வார்டு ஆதனூர் - கருப்பமனை தேரடித் திடலில் ரூ.50  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிகளுக்கு, பேராவூரணி பேரூ ராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு, பகுதிநேர அங்கா டியையும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யையும் திறந்து வைத்தும், தென்னங்கன்று கள் நட்டு வைத்தும் பேசினார்.  இதில் வட்டாட்சியர் தெய்வானை, வட்ட  வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், பேரூ ராட்சி செயல் அலுவலர் இரா.ராஜா, கூட்டு றவு சார்பதிவாளர் தாரணி, உள்ளிட்ட பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர். இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடி மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.