மயிலாடுதுறை, அக்.3 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடு துறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அந்தந்த ஊராட்சிகளில் செய்து முடிக்கப் பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சீர்காழி ஒன்றியம் ஆச்சாள்புரம் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார். வானதிராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டார். மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந் துள்ள தீவு கிராமமான கொடியம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகி யோர் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோ சித்தனர். கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொடியம்பாளையம் கிராம சாலையை நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.