கரூர், பிப்.3- உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம் புகளூர் வட்டம், பவுத்திரம் பகுதி யைச் சேர்ந்த க.பூபதி (38), திருச்செங்கோடு அருகே உள்ள கந்தபாளையம் காந்தி மேல்நிலைப் பள்ளி யில் தற்காலிக கணித ஆசிரி யராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30.1.2024 அன்று நள்ளிரவில் நிகழ்ந்த விபத் தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்.1 அன்று மாலை 4.30 மணியளவில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத் தினர் முன்வந்தனர். அதன் படி, கல்லீரல், இரண்டு சிறு நீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் என 6 உறுப்பு கள் தானமாக பெறப்பட்டு உள்ளன. உடல் உறுப்பு தானம் செய்த க.பூபதியின் உடல் பவுத்திரம் மந்தை பகுதி யில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. அங்கு மாவட்ட வரு வாய் அலுவலர் ம. கண்ணன் நேரில் சென்று, தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார்.