கரூர், செப்.11 - ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 வெற்றி கரமாக நிலவில் தடம்பதித்த நிகழ்வை கொண்டாடும் விதமாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், குளித்தலை ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ சாய் வித்யாலயா பன்னாட்டு பள்ளி மாணவர் கள் 1,388 ஏவுகணை மாதிரிகளை செய்து, குளித்தலை பெரியபாலம் முதல் சுங்ககேட் வரை பேரணியாகச் சென்றனர். இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரம்யா தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் டாக்டர் கே.கருணாநிதி மற்றும் சாவித்திரி முன்னிலை வகித்தனர். குளித் தலை ஆய்வாளர் எம்.என்.இளங்கோ, போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பேரணியை துவக்கி வைத்து பேசினர். இதில் குளித்தலை லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ‘டிஸ்கவர்’ உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.