தஞ்சாவூர், ஜூலை 26 -
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன் னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நாகரசம்பேட்டை கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் ஜூலை 29 அன்று (சனிக்கிழமை) காலை 8 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கரு வூட்டல், சினைப் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மேற்கொள் ளப்பட உள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்த ரங்கம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.