தோழர் பி.சீனிவாச ராவ் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் தலைமையில், அனைத்துப் பத்திரிகையாளர்களும் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர்கள் ரவி, இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.