districts

img

ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.13- உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கண்பார்வை தின விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் வியாழனன்று நடை பெற்றது.  இதில் மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி கலந்து கொண்டு உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். மேலும் விழிப்புணர்வு பலூன் களும் பறக்க விடப்பட்டன. இந் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.   ஜோசப் கண் மருத்துவமனை யின் இயக்குநர் டாக்டர் பிரதீபா, நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். பாரத் குரூப் ஆப் கம்  பெனிஸ் நிர்வாக இயக்குநர் ரோட்டேரியன் கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாரதி தாசன் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா சிறப்புரை யாற்றினார். டாக்டர் பிரதீபா விழிப்பு ணர்வு நிகழ்வின் நோக்கங்களை விளக்கினார்.