districts

img

தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு - புதுகை ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன.4 -  தச்சங்குறிச்சியில் சனிக்கிழமை ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை வட்டம், தச்சங்குறிச்சியில் சனிக் கிழமை (ஜன.6) அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற் பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா புதன்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  ஜல்லிக்கட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறி முறைகளை உரிய முறையில் பின்பற்றி, பாது காப்பான வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை  நடத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத் தினார்.