மயிலாடுதுறை, டிச.16 - மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சிக்குட்பட்ட பாலவெளி தியா நகரில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளன. இந்நகரில் முறையான சாலை வசதிகள் இல்லாமல், மண்பா தையே கடந்த பல ஆண்டு களாக சாலையாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மழைக்காலங்க ளில் வெளியில் நடக்ககூட முடி யாமல் உள்ள நிலையில், சமீபத் தில் பெய்த கனமழையாலும், அவ்வப்போது பெய்யும் மழை யாலும் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதி யுமாக காணப்படுகிறது. அன்றாட பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்தோடு இச்சாலையில் சென்று வருகின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் மண் புழுதி யால், நடந்து செல்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நட வடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்து வதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். தியா நகர் பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று புதிய சாலைகளை அமைத்து, மழைநீர் தேங்கும் பள்ளமான பகுதிகள் எப்போது சீரமைக்கப்படும்?