districts

img

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குக்கான படிவம் வழங்கல்

புதுக்கோட்டை, மார்ச் 21- 85 வயதுக்கு மேற்பட்ட வாக்கா ளர்களுக்கு தபால் வாக்குப் பதிவு  செய்வதற்கான 12டி படிவம் வழங்கும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையம் மாவட்டம் தோறும் 85 வயதிற்கு  மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திற னாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 12டி படிவத்தை, அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கும் பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.  அதனடிப்படையில், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக் கோட்டை சட்டமன்ற தொகுதி, திருக்கோகர் ணம் அருங்காட்சியகம் அருகில், புதுதெரு அண்ணா நகரில் பூரணம் மற்றும் வீரம்மாள்,  திருக்கோகர்ணம் மியூசியம் பகுதியில் முத்துச் சாமி ஆகிய 85 வயதிற்கு மேற்பட்ட வாக்கா ளர்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்வ தற்கான 12டி படிவம் அவர்களது வீட்டிற்கு  நேரில் சென்று வழங்கப்பட்டது. இதற்கான பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சா.மெர்சி ரம்யா வியாழக் கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் அருகில், நிலையான கண்காணிப்பு குழுவின் பணிகளையும் மற்றும் புதுக்கோட்டை வட்டம் இச்சடி பகுதி யில் பறக்கும் படையினரின் பணிகளையும் ஆய்வு செய்தார்.  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.