மயிலாடுதுறை நவ.17- மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதீத கனமழையால் நடவு செய்த சம்பா நெற்பயிர் அழுகி விட்டது. குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழையால் வீடுகள், கால்நடைகளை இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கன மழையால் 90 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், ஆயிரக்கணக்கான குடிசை வீடு கள், கால்நடைகள் என கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது மயிலாடுதுறை மாவட்டம். தமிழக அரசு மழையால் சூழப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம்,சேதமடைந்த வீடு களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், ஒவ்வொரு பகுதிகளிலும் தேவையான அளவிற்கு நிவாரண முகாம் களையும், நோய்,தொற்றுத் தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள சுகாதார முகாம் களை அமைக்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும். குடியிருக்க தகுதியில் லாத தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்.