districts

img

பெரியகுளத்தில் கிடக்கும் இரும்பு மின் கம்பங்கள் மின்வாரியம் கவனிக்குமா?

தஞ்சாவூர், ஜூன் 19-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியகுளம் சுமார் 532 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த பெரியகுளம் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில், 280 ஏக்கருக்கும் குறைந்த அளவில் சுருங்கி உள்ளது.  தற்போது கோடை காலம் என்பதால் பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது. இந்த பெரிய குளத்தின் வழியாக  பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அவை சிமெண்ட் மின் கம்பங்களாக மாற்றப்பட்டு பெரிய குளத்தின் கரைப் பகுதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  இருந்த போதிலும் பெரியகுளத்தின் உள்ளே பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் மின்வாரியத்தால் கைவிடப்பட்ட இரும்பு மின் கம்பங்கள், மின் வாரியத்தால்  அகற்றப்படாமல் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்டவர்கள், இந்த இரும்பு மின் கம்பங்களை பயனுள்ள வகையில் எடுத்துச் சென்று பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.