பாரம்பரிய ரக நெல் ஏலம்
பாபநாசம், ஏப்.4 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்குமுறை விற்ப னைக் கூட கண்காணிப்பா ளர் தாட்சாயிணி தலைமை வகித்தார். ஏலத்தில் 6 டன் கருப்பு கவுனி நெல் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச மாக ரூ.92.50-க்கும், குறைந்தபட்ச விலை யாக ரூ.73-க்கும் விலை போனது. 500 கிலோ பூங்காறு நெல் அதிகபட்ச மாக ரூ.34-க்கு விலை போனது. இதில் வியாபாரி கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாபநாசம், ஏப்.4 - மயிலாடுதுறை நாடா ளுமன்றத் தொகுதிக் குட்பட்ட அய்யம்பேட் டையை அடுத்த வழுத்தூரில், அனைத்து வாக்காளர்களும் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன், பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் வாக்காளர் களின் வீடுகளுக்குச் சென்று தேர்தல் அழைப் பிதழ்கள், துண்டு பிரசுரங் கள் வழங்கினர். மேலும், வாகனங்களில் ஸ்டிக்கர் கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஏப்.4 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில், பேரை துளிர் நண்பர்கள் அறக் கட்டளை சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, அறக் கட்டளை நிர்வாகி ஏசியன் முகமது முஸ்கிர் தலைமை வகித்தார். பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார், செயலாளர் சண் முகநாதன் மற்றும் பொரு ளாளர் வன்மீகநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பேராவூரணி நகர வர்த்தக கழக முன்னாள் பொருளாளர் ஜகுபர் அலி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் இமாம் மற்றும் ஊழியர் களுக்கு, ரமலான் பரிசாக புத்தாடை வழங்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சமூக நல்லிணக்க நிகழ்வை நடத்தி வரும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், இந்த நிகழ்வை இனி ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தி, சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ் வோம் என்றனர்.
பாபநாசம்
பாபநாசத்தை அடுத்த இராஜகிரி காசிமியா ஜமா லியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில், காசி மியா பள்ளி வாசலில் இப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காசிமியா பள்ளி இமாம் அப்துல் அலீம், பெரிய பள்ளி இமாம், சாகுல் ஹமீது பைஜி உள்ளிட் டோர் பேசினர். இதில் இராஜ கிரி, பண்டாரவாடை, வழுத்தூர், சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பாப நாசம், வடக்கு மாங்குடி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், உள்ளூர் மற்றும் சுற்று வட்டார தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் மீது தேர்தல் ஆணையத்தில் சிபிஎம் புகார்
புதுக்கோட்டை, ஏப்.4- தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் கட்சி நிர்வாகிகளுக்கு கார் மற்றும் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ள தன் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தலைமைத் தேர்தல் அலுவ லர் சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இந்தத் தேர்தலில் மதிமுக வேட்பாளரை விடவும் கூடுத லாக வாக்கு பெற்றுத் தரும் அதிமுக நகரச் செய லர்களுக்கு கார், வட்டச் செயலர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே, இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த ரூ.12.22 லட்சம் விடுவிப்பு
தஞ்சாவூர், ஏப்.4- நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.22 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, புதன்கிழமை விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சி யரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மக்கள வைத் தொகுதியில் புதன்கிழமை கனரக வாகனங்களைப் பறக்கும் படை யினர் சோதனை செய்தனர். அதில் தேர்தல் நடத்தை விதிமீறலின் காரண மாக ரூபாய் ஒரு லட்சத்து 18,500, ரூ.54,200, ரூ. 6,65,464, ரூ.71,750, ரூ. 79,700, ரூ.1,39,900, ரூ. 93 ஆயிரம் என மொத்தம் ரூ.12,22,514 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசார ணையின்படி, தேர்தல் செலவின மேல் முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவ ணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடு வித்துக் கொள்ள ஏதுவாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
ஆந்திரா கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரம் ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், ஏப்.4- ஆந்திராவில் தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில், ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றியவர் எஸ்.ராஜ சவுந்தர்ராஜன் (59). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் கல்வி யியல் கல்லூரி தொடங்குவதற்கான கட்ட மைப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட தேசிய கல்வியியல் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பின ராக சென்றிருந்தார். ஆனால் முறையாக கட்டமைப்புகளை ஆய்வு செய்யாமல், கல்வியியல் கல்லூரி தொடங்குவதற் கான அனுமதி சான்றிதழ்களை ராஜ சவுந்தராஜன் வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆந்திராவில் உள்ள வர்கள் சிபிஐக்கு புகார் அனுப்பினர். புகாரினை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு, போலி யான சான்றிதழ்களை வழங்கிய இணைப் பேராசிரியர் ராஜ சவுந்தர்ராஜன் மீது நட வடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம், போலியான சான்றிதழ் வழங்கிய ராஜ சவுந்தர்ரா ஜனை பணியிடை நீக்கம் செய்து புதன் கிழமை உத்தரவிட்டுள்ளதாக, தஞ்சா வூர் கல்லூரி கல்வி இணை இயக்குநர் தன ராஜன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் துணை ராணுவம் அணிவகுப்பு
புதுக்கோட்டை, ஏப்.4 - தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒடிசா மாநிலத்திலிருந்து வந்த துணை ராணுவப் படை யினர் புதுக்கோட்டையில் ஆயுதம் ஏந்தி அணிவகுப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டைக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து சிறப்பு ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் 218 பேர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வியாழக் கிழமை இந்திய துணை ராணுவப் படையினர், தமிழ் நாடு காவல்துறையினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ‘வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்’, ‘உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் இருக்கிறோம்’ என்பதை உணர்த்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு அண்ணா சிலை, கீழராஜா வீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி வழி யாக நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
புகையிலைப் பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
தஞ்சாவூர், ஏப்.4- திருச்சிற்றம்பலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம், செருவா விடுதி கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சிற்றம் பலம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த மார்ச் 28 அன்று இரண்டு கடை களை சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் புகையிலைப் பொருட்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து, உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், பட்டுக்கோட்டை, பேராவூரணி உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், காவல்துறையினர் திருச்சிற்றம்பலம், செரு வாவிடுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கும் அபராதம் விதித்து, அக்கடைகளை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். இந்த இரண்டு கடைகளையும், 14 நாட் களுக்கு திறக்க தடை விதித்துள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூர், ஏப்.4- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை மற்றும் நவீனத் தமிழாய்வு ஆய்விதழ் இணைந்து “உரையாசிரி யர்களின் உத்திகள்” எனும் பொருண்மையிலான பன்னாட் டுக் கருத்தரங்கத்தை நடத்தின. இக்கருத்தரங்கில், இலக்கியத் துறைத் தலைவர் பேரா சிரியர் ஜெ.தேவி வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் சி.தியாகராஜன், 61 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடக்கிய கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ‘மருத்துவர் சு.நரேந்திரனின் அறிவியல் தமிழ்ப் பணிகள்’ எனும் தலைப்பிலான முனை வர் இரா.தனலெட்சுமி நூலின் மறுபதிப்பு வெளியிடப் பட்டது. மேலும் அவரின் ‘நற்றமிழ் வித்துகள்’ எனும் தலைப்பி லான நூலினைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலு வலர் பெ.இளையாப்பிள்ளை வெளியிட, இலக்கியத்துறை தலைவர் ஜெ.தேவி பெற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சி.தியாகராஜன் தலைமை வகித்துப் பேசினார். இலக்கியத்துறை பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை நோக்கவுரையாற்றினார். தஞ்சை அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் தலைவர் மருத்துவர் சு.நரேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர் ச.கவிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இலக்கிய மாமணி இரா.கலியபெருமாள் பெருமை களைப் போற்றும் வகையில், சிறப்புக் காணொலி வெளி யிடப்பட்டது. தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதாளர் இரா.கலியபெருமாள், சங்க இலக்கியம் மற்றும் சமகால இலக்கியங்களுக்கான உரை குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கட்டுரையாளர்களுக்கான அமர்வுகள் நடத்தப்பட்டன. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் இலக்கி யத் துறை உதவிப் பேராசிரியருமான இரா.தனலெட்சுமி நன்றி கூறினார்.
ஆக.11,12 இல் தஞ்சையில் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
தஞ்சாவூர், ஏப்.4- பன்முகத் தளத்தில் தமிழ் வளர்ச்சி, வெவ்வேறு கோணங்களில் தமிழ் ஆராய்ச்சி என்னும் இரு குறிக்கோள்களை அடிப்படை யாக வைத்து, இரண்டாவது உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டினை, சென்னை வளர்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண் பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த உள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 ஆகஸ்ட் 11, 12 ஆகிய நாட்களில் நடை பெற உள்ள இம்மாநாட்டில் உலக நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநி லங்களிலுள்ள பேராசிரியர்கள், அனைத்து நிலைக் கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், தமிழ்க் கணினித் துறையினர், தமிழ் அமைப்புகள் மற்றும் இயல் இசை நாடகக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. வி.திருவள்ளுவன் நெறிகாட்டுதலில் நடைபெற்ற இதற்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், தமிழ் வளர்ச்சி கழகத் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ் சம்பத், இந்திய வெளியுறவுத் துறை மேனாள் உயர் அலுவலர் வெ.மகா லிங்கம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறைத் தலைவரும் இயக்குநருமான பேராசிரியர் சு.பாலசுப்ர மணியன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் புலத் தலைவர்கள் பங்கேற்றனர். மாறி வரும் நவீன சமூகச் சூழலுக்கு ஏற்ப தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் தமிழ் பண்பாட் டின் அடையாளங்களைத் தக்க வைத்து பரப்பும் வகையிலும், பல்வேறு மொழிகள் தொடர்பான ஆய்வுகள் குறித்த ஆய்வு கட்டு ரைகளை அயல்நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் இருந்து பெற்று மாநாட்டில் ஆய்வுக் கோவையாக வெளியிடுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அயர்விலாது தொடர்த் தமிழ்ப் பணிகளை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு வளர் தமிழ் அறிஞர் மற்றும் வளர் தமிழ் மாமணி விருதுகள் இம்மாநாட்டில் வழங்கப் பட உள்ளதாகத் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்தார்.