வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
பாபநாசம், ஆக.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் முக மது சதாம் உசேன், பாப நாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகன், சைல்டு ஹெல்ப் லைன் மேற் பார்வையாளர் அஜிதா உள்ளிட்டோர் பாபநாசத் தில் உள்ள பெட்டிக் கடை, மளிகை கடை, அடகு கடை, ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறு வனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை தொழிலா ளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாதென்று வணிக நிறுவன உரிமை யாளர்களிடம் அறி வுறுத்தினர்.
பள்ளி மேலாண்மைக் குழு பார்வையாளர் கூட்டம்
அறந்தாங்கி, ஆக.9 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு, மறு கட்டமைப்பு பார்வையா ளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா தலைமை வகித் தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற் பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். பள்ளி மே லாண்மை குழு மறு கட்ட மைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரி யர் பயிற்றுநர் பன்னீர் செல்வம் கூறினார். இக் கூட்டத்தில் ஆக.10 அன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுகிற 50 சத வீத தொடக்கப் பள்ளி களுக்கு உட்பட்ட பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.
அரியவகை கடல் அட்டைகள் வைத்திருந்தவர் கைது
தஞ்சாவூர், ஆக.9- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட, பேரா வூரணி அருகே உள்ள மந்திரிப்பட்டினம் பகுதி யில், அரசால் தடை செய் யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான 112 கடல் அட்டை களை பிடித்து வைக்கப் பட்டிருந்தன. இதை வைத்திருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50) என்பவரை பட்டுக் கோட்டை வனச்சரக அலு வலர் ஏ.எஸ்.சந்திரசேக ரன் தலைமையில், வன வர் சிவசங்கர், வனக் காப்பாளர் கலைச்செல் வன் ஆகியோர் விசார ணைக்காக பட்டுக் கோட்டை வனச்சரக அலு வலகம் அழைத்து சென்ற னர். பின்னர், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தர வின்படி, வழக்குப் பதியப் பட்டு பேராவூரணி மாஜிஸ் திரேட் முன்பு (பாபநாசம் கூடுதல் பொறுப்பு) நேர்ப்படுத்தப்பட்டு, தஞ்சாவூர் கிளைச் சிறை யில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப் பட்டார்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 117 கிலோ கஞ்சா பறிமுதல் காவலர், அவரது நண்பர் கைது
தஞ்சாவூர், ஆக.9 - தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த உள்ளதாக காவல்துறையின ருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வியாழக்கிழமை இரவு வண்டிப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழி யாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக 117 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, 117 கஞ்சா மூட்டையும், காரையும் பறிமுதல் செய்து, காரில் வந்த இருவரையும் அதி ராம்பட்டினம் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் இருவரிடமும் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த சங்கர ராஜபாண்டி யன் (33), அவரது நண்பர் திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த தவ மணி (26) என்பது தெரியவந்தது. இதில், சங்கர ராஜபாண்டியன் திருச்சி மாவட்டம், திரு வெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் காவல ராகப் பணியாற்றிய நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.4 அன்று முக்கொம்பு அணை பகுதியில், வீடியோ எடுத்து கொண்டிருந்த 17 வயது சிறுமியை விசாரிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக புகார் வந்தது. இதையடுத்து போக்சோ வழக்கு பதியப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சங்கர ராஜ பாண்டியன், தவமணி இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, மீனவர்கள் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
ஆக.13-23 முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கும்பகோணம், ஆக.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆக.13 முதல் 23 வரை நடைபெறுகிறது எனக் கல்லூரி முதல்வர் அ.மாதவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக.13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு ஒதுக்கீடு (DA, Sports, NCC, Ex-Service Men, A&N Island, Security Force) பிரிவுகளுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு காலை 10 மணிக்கு நடைபெறும். ஆக.19, 20 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்துத் துறைகளி லும் சான்றிதழ் சரிபார்ப்பு காலை 10 மணிக்கு நடைபெறும். ஆக. 22 அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிர்வேதியியல், கணினி அறிவியல், புவியியல் துறைகளில் மாணவர் சேர்க்கை காலை 10 மணிக்கும், ஆக.23 அன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல் துறைகளில் மாணவர் சேர்க்கை காலை 10 மணிக்கும் நடைபெறும். இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள மாணவ, மாணவிகள் மேற்கண்ட அட்டவணைப்படி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப் பித்த பாடப்பிரிவுகளில் மட்டுமே சேர முடியும். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே சேர்க்கைக்குத் தகுதி பெற்றவர்களாவர். மதிப்பெண் தர வரிசைப்படி அரசு விதிகளுக்குட்பட்டு சான்றி தழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் தகுதி பெற்ற மாணவர்களின் சேர்க்கை, அவரவர் துறைகளில் மேற்கண்ட அட்டவணைப்படி ஆக.22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடை பெறும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் மாணவர்கள் கால தாமதத்தைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் பெறலாம்
தஞ்சாவூர், ஆக.9- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வு களுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார்.
கல்லணை கால்வாய் புனரமைக்கும் பணி: விவசாயிகள் பார்வை
அறந்தாங்கி, ஆக.9 - புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் கல்லணை கால்வாய் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர்கள்- விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர். தலைவர் கொக்குமடை ரமேஷ், செயலாளர் வீரப்பன், பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் நீர் விளங்குளம் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சங்க நிர்வாகிகள், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, “90 சதவீதம் வேலை முடிந்த நிலையில் ஆக.15 அன்றுக்குள் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். இந்த புனரமைக்கும் பணி மும்பாலை வரை முடிகிற தருவாயில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில் எந்த தேக்கமும் இருக்காது. விரைவில் முழு கொள்ள ளவு தண்ணீர் கிடைக்கும்” என உறுதி அளித்துள்ளனர். இத்தகவலை கல்லடைக் கால்வாய் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
34 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
தஞ்சாவூர், ஆக.9 - பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 34 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களி டையே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன் பாடு அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நி லையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், பேராவூரணி காவல்து றையினர், ரெட்டவயல் கடைவீதியில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூல் லிப், பான் பராக், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் ஹபீப் ரஹ்மான் (52) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், புகையிலை பொருட்களை விநியோகம் செய்ததாக பேராவூரணி பாலமுருகன் (40), சித்துக்காடு காளிமுத்து (55) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மூவரிடமிருந்தும் சுமார் 34 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து மூவரை யும் நீதிமன்றத்தில் நேர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இயற்கை வேளாண்மை பயிற்சி நிறைவு
தஞ்சாவூர், ஆக. 9- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய, சமுதாய வள பயிற்றுநர்களுக்கான, இயற்கை வேளாண்மை பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி என்.முத்துக்குமரன் தொடக்க உரை ஆற்றி னார். தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் மேலாண்மைகள் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சி களை, எங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள விவசாயி களிடம் எடுத்துச் செல்வோம் என உறுதியளித்தனர். பயிற்சியில் மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 சமுதாய வள பயிற்று நர்கள் கலந்து கொண்டனர். ஐந்து நாள் பயிற்சி வெள்ளிக் கிழமை நிறைவு பெற்றது.
இதயா மகளிர் கல்லூரியில் நவீன இலக்கிய பயிலரங்கம்
கும்பகோணம், ஆக.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையும், வண்டல் இலக்கிய அமைப்பும் இணைந்து நவீன இலக்கிய பயிலரங்கம் நடை பெற்றது. சிறப்பு விருந்தினர் கவிஞர் செருகுடி செந்தில், சமகால கவிதைகள் குறித்து பயிற்சி வழங்கினார். எழுத்தாளர் கு.இலக்கியன் சிறுகதைகளும் கதாசிரியர்களும் என்ற தலைப்பில் சிறுகதையின் பொதுவான தன்மை மற்றும் ஆய்வு கருத்துகள் குறித்து உரையாற்றினார். எழுத்தா ளர் அண்டனூர் சுரா, தமிழ் நாவல்களும் நுட்பங்களும் என்ற தலைப்பில் ஆராய்ச்சியை நோக்கில் நாவலை அணு கும் முறை குறித்து பயிற்சி வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி யூஜின் அமலா அன்னை தலைமை உரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் த.ஹேமலதா, பேரா கை.சங்கீதா ஒருங்கி ணைக்க தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரியமே ஏற்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஆக. 9 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் 15 ஆவது திருச்சி கிளை மாநாடு மணப்பாறையில் நடை பெற்றது. சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.செல்வராசு தலைமை வகித்தார். சங்க கொடியை மூத்த தோழர் ஆரோக்கியம் ஏற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி வாசித்தார். பஞ்சாபிகேசன் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் பஷீர் துவக்க உரையாற்றினார். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே அமல்படுத்த வேண்டும். காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்ற பணத்தை உடனே வழங்க வேண்டும். சிகிச்சைக்குரிய முழு பணத்தை யும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அகவி லைப்படி அறிவித்த உடனேயே மின்வாரிய ஓய்வூதியர் களுக்கும் அறிவித்து வழங்க வேண்டும். விதவை, விவாகரத் தான மகள்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதி தாக கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வாரிய ஆணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிளையின் புதிய தலைவராக மனோகரன், செயலாள ராக எம்.பன்னீர்செல்வம், பொருளாளர் எஸ்.சிவஞானம், துணைத் தலைவர்களாக ஜி.பஷீர், யு.கிருஷ்ணமூர்த்தி, ஆர். கண்ணையன், எஸ். ஆரோக்கியம், வி.கருப்பசாமி, ஜோதி, துணைச் செயலாளர்களாக சி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே. செல்வராசு, பி.சந்திரன், டி.ஜம்புலிங்கம், வி.தேவராஜ், வி. அன்னக்கிளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் பிச்சைராஜன் நிறை வுரையாற்றினார். அன்னக்கிளி நன்றி கூறினார்.