தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.510 கோடி யில் நடைபெற்று வரும் 2 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை சென்னை பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, விரிவாக ஆய்வு செய்து பணித்தளத்தில் பார்வையிட்டார். பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சா வூர் (பகுதி) ஒன்றியங்களைச் சார்ந்த 214 குடி யிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளையும், திருச்செனம்பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்று வரும் நீர் சேகரிப்புக் கிணறு, குழாய் கொண்டு செல்லும் பாலம் மற்றும் மின் இறைப்பான் அறைகளின் கட்டுமானப் பணிகளை பார்வை யிட்ட கிரண் குராலா, பணிகளை விரைவு படுத்தி, திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். அதன்பின்பு, கோவிலடி அருகே காவேரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 460 மீட்டர் நீளம் உள்ள குழாய் கொண்டு செல்லும் பாலம், கச்சமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள 90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறை பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், சருக்கை அருகே காவிரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் 210 மீட்டர் நீள முள்ள குடிநீர் குழாய் கொண்டு செல்லும் பால பணிகள் மற்றும் சாலையின் குறுக்கே குழி வெட்டாமல் குழாய் பதிக்கும் பணி முறை களை ஆய்வு செய்தார். அதன்பின் சூலமங்கலம் கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள 90 மி.மீ விட்டமுள்ள குழாய் களின் நீரழுத்த சோதனையை பார்வை யிட்டார். பசுபதிகோவில் பகுதியில் நடைபெற்று வரும் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வுக்கு பின்னர் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் உரிய காலத்தில் செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.