districts

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை,  மே 27-

     மயிலாடுதுறை வட் டாட்சியர் அலுவலகத் தில் விவசாயிகளின் தரவு கள் பதிவேற்றம் செய்யும்  பணி, பட்டா மாற்றம், தனிப் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் விண்ணப்பம் ஆகியவை பொது மக்களிடம் வரப்பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்  இயக்குநர் வே.அமுத வல்லி சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

   ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மயிலாடு துறை வருவாய் கோட்டாட் சியர் வ.யுரேகா, மயிலாடு துறை வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.