districts

img

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 10-  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதிகளில் க.மாரிமுத்து எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டி.சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நகராட்சி பகுதிகளில் பொதுவுடைமை போராளி தியாகி பி.சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தின் பராமரிப்பு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தினசரி காய்கறி அங்காடி கட்டிடம், திருக்குளம் மேம்பாட்டுபணி மற்றும் அரசு மருத்துவமனையில் நோயாளியுடன் வருபவர்கள் தங்குவதற்காக கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், நகர் மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;