கும்பகோணம், ஜூன் 18 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் நடன நாடக இசை யுடன் சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்த ரங்கம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தமுஎகச மாநகரத் தலைவர் மா.கலைச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் அசோக் குமார் வர வேற்றார்.
கவிஞர் ரா.கண்ணதாசன், ‘பாரதியை படி’ என்ற தலைப்பில் கவிதூரலும், மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டத் தலைவர் ஜீவபாரதி, மாவட்டச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்து ரையும் வழங்கினர். நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஸ்ரீ மல்லிகை பரதாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.
‘சிந்துவெளி பண்பாடு சாதித்த சவால் கள்’ என்ற தலைப்பில், புதுச்சேரி மொழியி யல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மானிடவியல் விரிவுரையாளர் பக்தவச்சல பாரதியும், தமிழ் பல்கலைக்கழக மொழிப்புல மெய்யியல் துறை உதவி பேராசிரியர் கோ. நல்லசிவம், ‘ஆதி இசை எங்களின் தமிழி சையே’ என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர். இறுதியாக மாநகரப் பொருளா ளர் பக்கிரிசாமி நன்றி தெரிவித்தார்.