திருவாரூர்,மார்ச் 8- நன்னிலம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் அரசுக் கல்லூரியில் கடந்த 8 ஆண்டுகளாக பட்ட மளிப்பு விழா நடைபெறவில்லை. பட்ட மளிப்பு விழா நடத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. பொறுப்பு முதல்வர் மட்டுமே உள்ளதாக கூறி பட்டமளிப்பு விழாவை தவிர்த்து வருகிறது இக்கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் தலை மையில் முன்னாள் மாணவர்கள் ஒன்றி ணைந்து கல்லூரி முதல்வரிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் ராமசுப்ரமணியன், ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்துவ தாக உறுதியளித்தார்.