கும்பகோணம், ஜூலை 29- டமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனம் புனித பயண தலங்களில் அதன் விரிவாக்கத்தில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில், நவீன வசதிகளுடன் கும்பகோணம் பாரம்பரிய உணவுகளை கொண்ட ‘லி லாக்’ ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. கும்பகோணம் மேம்பாலம் இறக்கம் அருகே (நீடாமங்கலம் ரோடு) புதிதாக கட்டப்பட்ட உயர்ரக லிலாக் ஹோட்டல் திறப்பு விழாவில், தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான சுருதி சிபுலால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஹோட்டல் மேலாளர் உன்னிகிருஷ்ணன் ஹோட்டலின் சிறப்பு அம்சம் குறித்து விளக்கினார். திறப்பு விழாவின்போது தலைமை நிர்வாக அதிகாரி சுருதி சுப்புலால் கூறுகையில், “குறைந்த விலையில் பிரம்மாண்ட விருந்தோம்பல் அனுபவங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது எங்கள் நிறுவனம். இந்நிறுவனத்தின் மூன்றாவது ஹோட்டலாக 188 கோயில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் கலாச்சார ரீதியான அமைப்புகளுடன்கூடிய சூழ்நிலை விருந்தினர்களுக்கு வழங்க இருக்கிறோம். லீலாக் ஹோட்டல் ஆனது அனைத்து தரப்பு மக்களும் அணுகும் வகையில் கோவில் தலங்கள் மற்றும் வரலாற்று தலங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் குழுக்களுக்கு ஏற்றதாக அமையும். இதனுடன் சேர்த்து, தமிழ்நாட்டின் தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் மூன்றாவது மற்றும் இந்தியாவில் ஒன்பதாவது ஹோட்டல் ஆகும். இந்த ஹோட்டலில் நகரின் உள்ளூர் பாரம்பரியத்தால் ஏற்கப்பட்ட கட்டிடக்கலை மற்றும் புற வடிவமைப்புடனும் கும்பகோணம் டிகிரி காபி முதல் கும்பகோணம் பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய மெனுவை வழங்குகிறது. வீட்டு சுப காரியங்கள் முதல் சமூக மற்றும் ஆன்மீக விழாக்கள் வரை, 60 பேர் வரை அமரும் வகையில் மினி பார்ட்டி ஹால்களும் உள்ளன. மேலும் இந்த ஹோட்டல் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்துகிறது மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தையும் வளர்க்கிறது. ஹோட்டலில் ஒவ்வொரு இடத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் நவீன வசதிகளை இணைப்பதன் மூலம் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத பயணங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் தாமரா லீசர் எக்ஸ்பீரியன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூத்த துணைத் தலைவர் மனோஜ் மேத்யூ, துணைத் தலைவர் கணேஷ் சஜ்ஜன், சமையல் கலை வல்லுநர் சங்கர், மேலாளர் சதீஸ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.