districts

img

சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் துவக்க விழா

அறந்தாங்கி,  ஜூலை 22 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் சாலையோர விற்பனையா ளர்கள் சங்கம் (சிஐடியு) துவக்கப்பட்டது. இதில் சிஐடியு கொடி யேற்றப்பட்டு, பெயர் பலகை  திறந்து புதிய கிளை துவக்க விழா கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியில்  நடைபெற்றது. விழாவிற்கு  சிஐடியு மணமேல்குடி ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர் கரூ.இராமநாதன் தலைமை வகித்தார். சிபிஎம்  ஒன்றியக் குழு உறுப்பினர் ரபீக்கான், சிபிஎம் கிளைச் செயலாளர் பாரூக் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் காளிதாசன் வரவேற் றார். சிஐடியு கொடியை மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர்  ஏற்றினார். பெயர் பல கையை சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் அன்பு மணவாளன் திறந்து வைத்தார்.  சாலையோர விற்பனையா ளர்கள் சங்க மாவட்டத் தலை வர் முகமது கனி வாழ்த்திப் பேசினார்.  சாலையோர வியாபாரி கள் சங்க தலைவராக தௌ பிக், செயலாளராக ரகுமான் கான், பொருளாளராக சலீம்  கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  சாலையோர விற்பனை யாளர்கள் அனைவருக்கும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும்.  சாலையோர விற்பனையா ளருக்கு ஊராட்சி ரசீது வழங்கி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க  வேண்டும். கோட்டைப்பட்டி னம் அரசு மருத்துவமனை யில் பிரசவ வார்டில் கூடு தல் படுக்கை வசதி செய்து  தர வேண்டும். மீனவர் குறை தீர் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.