districts

img

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பழத்தோட்டம், பூந்தோட்டம் திறப்பு

அறந்தாங்கி, ஆக.28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் முன் னாள் மாணவர்கள் பங்களிப்புடன் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு  விழா மற்றும் கல்லூரி வளாகத்திற் குள் பூந்தோட்டம், பழத்தோட்டம் அமைக்க செடிகள் நடவு செய்து, அவற்றை திறப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் ச.குமார் தலைமை வகித்தார். பொதுமக்கள், மாணவர் களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப் பட்ட பழத்தோட்டத்தை கட்டுமான பொறியா ளர் சங்க முன்னாள் தலைவர். ராஜபிள்ளை  சிவக்குமார் திறந்து வைத்து பழ மரக்கன்று களை நட்டார்.  பூந்தோட்டத்தை ஊர்வணி ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் திறந்து வைத்து பூச்செடிகளை நட்டார். பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீ.ஜோதிமணி திறன்மிகு வகுப்ப றைகள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி களில் பொறியாளர்கள் சிவக்குமார், வைத்தி யநாதன், சர்வம் சரவணன், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  இளம் சாதனையாளர் விருது இந்நிகழ்வில் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா, 7.5 சதவீத இட  ஒதுக்கீட்டில் திருநெல்வேலி அரசு மருத்து வக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பாராட்டி, மேற்ப னைக்காடு ராணியம்மாள் கல்வி அறக் கட்டளை நிறுவனர் பொறியாளர் சர்வம் சர வணன் சார்பில், மாணவிக்கு இளம் சாதனை யாளர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.