அரியலூர் ஜூலை 20 - சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் நபார்டு 2022 - 2023 திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டிடங்களை வெள்ளியன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, உடையார்பா ளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப் பறை கட்டிடம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நான்கு வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சுவாமி முத்தழ கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.