மயிலாடுதுறை, மே 1 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ வில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராம லிங்கம், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து பேசினர். முகாமில் இருதயநோய், சர்க்கரை நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட் டது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆய்வக பரி சோதனை நடைபெற்றது. முகாமில் தொழு நோய், யானைக்கால் உடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு பெட்டகங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராம லிங்கம், எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் வழங்கினர்.