கரூர், ஆக.18 -
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமை வகித் தார்.
முன்னதாக மாவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 77 ஆவது சுதந்திர தின விழாவில் மாவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா செந்தில்மோகன் தேசிய கொடியை ஏற்றிவைத் தார். தொடர்ந்து மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகங்கள், மரக்கன்றுகளை வழங்கப்பட்டன.
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறை வேற்றி தருவதே ஊராட்சி மன்றத் தின் முதல் கடமையாகும். குடிநீர் சேவையில் மாவத்தூர் ஊராட்சி பொதுமக்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் என தலைவர் கீதா செந்தில் மோகன் பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஒன்றிய கவுன்சிலர் பி.ராம மூர்த்தி, அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.