districts

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - தமிழக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப் படுத்துதல் தொடர்பான கூட்டம் நடை பெற்றது.  திருச்சி மாவட்டத்தில் உள்ள 205 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உரை யாற்றினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  பாலமுரளி, மாமன்ற உறுப்பினர்  ராமதாஸ், பள்ளி தலைமையா சிரியை ஆஷாதேவி மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.
குடவாசல்
கொரடாச்சேரி ஒன்றியம் அபி விருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் மேலாண் மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் இரெ.கற்பகம் தலைமையேற்றார். மேலப் பாலையூர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் பங்கேற் றார். தேர்வு செய்யப்பட்ட உறுப்பி னர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு  பள்ளி மேலாண்மை குழுவிற்கு  20 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி  மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றி தழ்களை பார்வையாளராக நிய மனம் செய்யப்பட்ட, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள், வட்டாரக் கல்வி அலுவ லர்கள், வட்டார வள மைய மேற் பார்வையாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி  மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கு வழங்கினர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் தலைவ ராக ஜாஸ்மின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.  தலைமை ஆசிரியர் சோம.மல்லேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பொன் னழகு, ராமதிலகம் வாழ்த்துரை வழங்கினர். கிராம நிர்வாக அலுவ லர் பாண்டியன் பார்வையாளராக பங்கேற்றார். 393 பெற்றோர்கள் தலைவர்,துணைத் தலைவர், உறுப் பினர்களை தேர்வு செய்தனர்.