கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பம்
புதுக்கோட்டை, மார்ச் 7 - விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து பயன்பெறலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் இருப்புள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் உள்ள இடங்களில் விவசாயிகள் கோடைப்பருவ நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் 40 சதவீதம் நீரினை மிச்சப் படுத்த முடியும். இதன்மூலம் நெல் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, திருந்திய நெல் சாகு படித் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்திட தரமான, சான்று பெற்ற, உயர்விளைச்சல், வீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதைகள் போதுமான தாகும். ஒரு ஏக்கர் நடவிற்கு ஒரு செண்டு (40 சதுர மீட்டர்) நாற்றங் கால் போதுமானது. மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலித்தீன் தாள்களைப் பரப்பி மரச்சட்டங்கள் வைத்து அதில் மண்ணையும் தொழு உரத்தையும் கலந்த கல வையை நிரப்பி விதைக்க வேண்டும். நடவு வயல் துல்லியமா கச் சமன் செய்யப்பட வேண்டும். சமன் செய்வதற்குத் துல்லிய சமன் செய்யும் கருவியைப் பயன்படுத்தி வயலைத் தயார் செய்திடல் வேண்டும். 10 முதல் 14 நாட்கள் வயதுடைய இளநாற்றுகளை நடவு செய்ய வேண்டும். அடையாளமிடுவதற்கு வசதியாக மார்க்கர் கருவியைப் பயன்படுத்தி 22.5 X 22.5 செ.மீ. இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும். குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் முறை யில் அதாவது நீர் மறைய நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 2.5 செ.மீ. உயரத்திற்கும் மேல் நீர் நிறுத்துதல் கூடாது. கோனோ வீடர் எனும் உருளும் களைக்கரு வியைக் கொண்டு நடவு செய்த 10 ஆம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை என நான்கு தடவை குறுக்கும் நெடுக்குமாகப் பயன் படுத்திக் களையெடுக்க வேண்டும். பச்சை இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தித் தேவையான தழைச்சத்தினை மேலு ரமாக இடுதல் வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்க ளைக் கடைப்பிடித்தால், குறைந்த விதையளவு போதுமானது. நாற்றங்கால் பராமரிப்புச் செலவு குறைகிறது. இளம் நாற்றை நடுவத னால் விரைவான பயிர் வளர்ச்சி, அதிக வேர் வளர்ச்சி மற்றும் அதிக தூர்கள் கிடைப்பதால் பயிர்களின் சாயாத தன்மை அதிகரிக்கிறது. மண்ணின் மேற்பரப்பில் உருளும் களைக்கருவிக் கொண்டு களையெடுப்பதனால் மண்ணின் காற்றோட்ட வசதி அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணு யிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது. 30 முதல் 40 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது. பூச்சிநோய்த் தாக்குதல் மற்றும் எலித் தாக்குதல் குறைகிறது. முதிரும் பருவம் வரை பயிர் பசு மையாக இருப்பதனால் பதர் இல்லாத நன்கு முற்றிய நெல் மணிகள் கிடைக்கின்றன. இத னால் கூடுதலான தானிய மகசூலும் அதிக வைக்கோல் மகசூலும் கிடைக்கின்றன. விவசாயிகளுக்குக் கூடுதல் லாபமும் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடித் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து கோடைப்பருவ நெல் சாகுபடியில் உயர்விளைச்சல் பெற்று பயன டைய வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தி னை அணுகலாம். இவ்வாறு ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
மார்ச் 9, 10 சீர்காழி இசைப் பள்ளியில் கலைப் போட்டிகள்
மயிலாடுதுறை, மார்ச் 7 - கலைத்துறையில் சிறந்து விளங்குகிற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குர லிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுக ளில் மாவட்ட/மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அளவிலான போட்டிகள், சீர்காழி புழுகாப்பேட்டையில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. மார்ச் 9 சனிக்கிழமை அன்று ஓவியம் மற்றும் கிராமிய நடனம் போட்டிகளும், மார்ச் 10 ஞாயிறு அன்று குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகளும் நடைபெறும். குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைப் போட்டியிலும், தாளக்கரு விகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் பிரிவுகளிலும் இசையை முறையாக பயின்றவர்கள் பங்குபெறலாம். பரதநாட்டியம் பிரிவில் ஒரு மார்கம் தெரிந்தவர்கள் பங்குபெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடி யாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயி லாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறை யாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனு மதிக்கப்படும். அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவர். ஓவியப் போட்டியில் பங்கேற்ப வர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப் படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவர். இப்போட்டிகளில் முதல் பரிசு ரூ.6000, இரண்டாம் பரிசு ரூ.4500 மூன்றாம் பரிசு ரூ.3500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தொலைபேசி எண் 04364-274611-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ் வாய்ப்பினை கலைத்திறன் மிக்க மயிலாடு துறை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இணையவழியில் கடன் தருவதாகக் கூறி ஓட்டுநரிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி
தஞ்சாவூர், மார்ச்.7 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இணையவழியில் கடன் தருவதாகக் கூறி பேருந்து ஓட்டுநரிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி செய்த நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பாபநாசம் அருகேயுள்ள பகுதி யைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்கு 2022 ஆம் ஆண்டில் வந்த கைப்பேசி அழைப்பில் குறைந்த வட்டியில் ரூ. 7 லட்சத்துக்கு தனி நபர் கடன் வழங்கு வதாகத் தகவல் வந்தது. இதற்கான கட்டணம் செலுத்தினால் கடன் தொகை வழங்கப்படும் எனவும் எதிர்முனையில் பேசிய நபர் கூறினார். அதற்கு பதிவுக் கட்டணம், வரி, கே.ஒய்.சி. கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த நபர் கூறினார். இதை நம்பிய ஓட்டுநர் பல்வேறு கட்டங்களாக ரூ. 2.27 லட்சத்தை அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தினார். அதன் பிறகு அந்த நபர் கடன் தொகையை வழங்காததுடன், ஓட்டுநரின் அழைப்பையும் எடுத்து பேசவில்லை. இது குறித்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் இணைய தளக் குற்றக் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை குறித்து பாஜகவின் வானதி, குஷ்பு ஏன் பேசவில்லை?
செல்வப்பெருந்தகை கேள்வி
தஞ்சாவூர், மார்ச்.7 - புதுச்சேரி சிறுமி பாலி யல் வன்கொலை செய்யப் பட்டது குறித்து பாஜகவின் மகளிர் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு ஏன் பேசவில்லை? என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் புதன்கிழமை யன்று அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் இழுபறியும் எதுவும் இல்லை. தமிழ் நாட்டு மக்களின் ஆன்மாவா கவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் தமிழக முதல்வர் இருக்கிறார். எனவே, ஒருபோதும் இழு பறி இல்லாமல், சுமூகமான தீர்வு கிடைக்கும். மாநிலக் கட்சிகளுடனான பேச்சு வார்த்தையே இன்னும் முடிவடையவில்லை. காங்கி ரஸ் தேசியக் கட்சி என்ப தால், அகில இந்தியத் தலை வர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் முடிவு செய்ய முடியும். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித தாமதமும் இல்லை. மகிழ்ச்சியாக நடை பெறுவதால் இனிப்பான செய்திகள் வரும். மோடி கூறிய எந்த வாக்கு றுதியையும் நிறைவேற்ற வில்லை. விளைபொருள்க ளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப் படவில்லை. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களை ஒரு முறை கூட பார்க்கவில்லை. அப்போது மக்களைப் பார்க்க வராத மோடி, இப்போது வாக்குக்காக மட்டும் வந்து பார்க்கிறார். பகல் கனவு காணும் மோடி யை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். பொய்யும் புரட்டுமாக பேசும் மோடி அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக, காங்கிரசை அழிப்பேன் எனக் கூறுகிறார். அவரது கட்சி இத்தேர்தலில் இருக்கி றதா என பார்ப்போம். புதுச்சேரியில் 4 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொ டர்பாக தமிழிசை சௌந்தர ராஜன், வானதி சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பி னர் குஷ்பு உள்பட யாருமே வாய்த் திறந்து நீதி கேட்க வில்லை. ஆனால், தமிழ் நாட்டில் சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும், பெரிய அளவுக்கு கொக்கரிப்பர். இவ்வாறு அவர் கூறி னார். முன்னதாக, செல்வப் பெருந்தகையை மாவட்டத் தலைவர்கள் து.கிருஷ்ண சாமி வாண்டையார் (தெற்கு), பி.ஜி.ராஜேந்திரன் (மாநகர) உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இலவச காது வால் நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்
தஞ்சாவூர், மார்ச்.7 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை கோக்ளியர் இம்பிளான்ட் இலவசமாக செய்யப்படுகிறது என்று கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிறவிக் குறைபாடு காரணமாக காது கேளாத குழந்தைகளுக்கும், வயோதி கத்தால் செவித்திறன் இழந்த முதியோ ருக்கும் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர்களுக்கு காது கேட்புக் கருவிகளை (செவ்வாய்க்கிழமை) வழங்கிய கல்லூரி முதல்வர் பின்னர் தெரிவித்தது: பிறவியிலேயே சிலருக்கு காது கேட்காது. வயோதிகத்தால் செவித் திறன் இழக்கும் முதியவர்களும் உள்ளனர். இவர்கள் சரியான நேரத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினால் ஆரம்ப இடையீட்டு மையம் மூலம் பரி சோதனை செய்யப்படும். இதைத் தொடர்ந்து காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப் பட்டு, காது கேட்புக் கருவி பொருத்தப் படும். மேலும், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சைக்கு பிறகு 2 மாதங்களுக்கு பேச்சுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், காது கேளாத குழந்தைகள் பேச்சுத் திறனையும் பெறுகின்றனர். இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் செலவாகும். ஆனால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இச்சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. இதுவரை 61 பேருக்கு இத்தகைய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மருத்துவக் கண்காணிப்பா ளர் சி.ராமசாமி, நிலைய மருத்துவ அலு வலர் ஏ. செல்வம், காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், உதவிப் பேராசிரியர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பேராவூரணி அருகே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சாவூர், மார்ச் .7 - பேராவூரணி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணகுமார். இவர் கோவை அருகே மனைவியுடன் தங்கி குளிர்பா னக் கடை நடத்தி வருகிறார். இதனால் இவரது மகன் ஹரிபாலன் (12) பாட்டியுடன் உறவினர் வீட்டில் தங்கி, அம்மையாண்டி அருகே உள்ள ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர்களும், உறவினர்களும் பரீட்சை வருவ தால் நன்றாக படிக்க வேண்டும் என்று ஹரிபாலனிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை காலை ஹரிபாலன் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த ஹரிபாலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். . இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் சேரன் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தை பார்வையிட்டார். ணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.