திருவாரூர், நவ.23- பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது பலமடங்கு அநியாய மாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட சாலைவரியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திரு வாரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.ஜெ.ஆர்.காதர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பி.பார்த்தசாரதி, மாநிலக்குழு உறுப்பினர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட செயலாளர் எஸ்.வெங்க டேசன், சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி ஆகியோர் பேசினர்.