புதுக்கோட்டை, நவ.11 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலை மையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் ஆட்சி யரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தர விட்டார். மேலும் மணமேல்குடி வட்டம், கோட் டைப்பட்டினம், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராக்காயி என்பவர், தனது கணவர் ஏற்க னவே இறந்துவிட்ட நிலையில், தனது மன வளர்ச்சி குறைபா டுடைய மகன் கேச வன் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு உயிரி ழந்து விட்டார். இத னையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கிடக் கோரி மனு அளித்தார். இம்மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, இயற்கை மரண நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 4 மணி நேரத்திற்குள் வாரிசு சான்றிதழ் மனு தாரருக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லரிடம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் ரூ.17,000 இயற்கை மரண நிதியு தவி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்