districts

img

சென்னை ஐஐடி-யில் ஜூலை முதல் ஏஐ படிப்பு தொடக்கம்

தஞ்சாவூர், மார்ச் 11- சென்னை ஐஐடி-இல் ஏஐ அன்ட் டேட்டா அனாலிட்டிக்ஸ் என்ற புதிய படிப்பு 2024 ஜூலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது என்றார் அதன் இயக்குநர் வி.காமகோடி. தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மருதுபாண்டி யர் கல்வியியல் கல்லூரி பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உலகிலேயே 15 - 35 வயதுக் குட்பட்ட இளைய சமுதாயத் தினரை அதிகமாகக் கொண்ட நாடு  இந்தியாதான். இவர்களுக்கு கல்வி சரியான முறையில் வழங்கப் பட வேண்டும். குறிப்பாக, கிராமப் புறம் உட்பட அனைத்துப் பகுதி களிலும் இளைஞர்களிடம் கல்வி யைக் கொண்டு சேர்க்க வேண்டிய  மிகப்பெரிய கடமை நமக்கு உள்ளது.  சென்னை ஐஐடி-இல் விளை யாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பரிசோதனை முறையில் தொடங் கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் களுக்கு ஐஐடி-இல் பி.டெக். படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப் படும். இவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தகுதி பெற்று ஏதோ  ஒரு தர வரிசையில் இருந்தால் போதும். தேசிய அளவில் ஒரு பதக்கம் அல்லது சர்வதேச போட்டியில் பங்கேற்பு இருந்தால், சென்னை ஐஐடி-இல் சேர விண்ணப்பிக்கலாம். செயற்கை நுண்ணறிவு (ஏஐ),  தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்)  போன்ற படிப்புகள் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இதில், செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள் ளதுடன், அது பல துறைகளில் வந்துள்ளது. எனவே, உலகி லேயே முதல் முறையாக சென்னை ஐஐடி-இல் ஏஐ அன்ட்  டேட்டா அனாலிட்டிக்ஸ் என்ற  படிப்பு வருகிற கல்வியாண்டில்  ஜூலை மாதம் தொடங்கப்பட வுள்ளது.  இதற்கு ஜே.இ.இ. அட்வா ன்ஸ்டு தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறும். சிறந்த  பாடத் திட்டங்களுடன் வேறு  எங்கும் இப்படிப்பு நடத்தப்பட வில்லை. இந்தப் படிப்பு வேலை வாய்ப்புக்கும், ஆராய்ச்சிக்கும், ஸ்டார்ட் அப் திட்டத்துக்கும் மிக வும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளைப் பாதுகாக்கும் விதமாக காப்புரிமைப் பெற்றுத் தரப்படுகிறது. சென்னை ஐஐடி-இல் இதுவரை 366 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  ஸ்டார்ட் அப் திட்டத்தில் மாண வர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத் துவதற்காகப் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரு கிறோம். இதன்மூலம், படித்து  முடித்த பிறகு வேலைக்குச் செல்வதை விட தொழில் தொ டங்கும் ஆசை மாணவர்களி டையே அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார். முன்னதாக, 300 மாணவர் களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத் தின் தலைவர் விமூர்த்தானந்த மகராஜ், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.  மருதுபாண்டியன் வாழ்த்துரை யாற்றினர். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர்  ப.சுப்பிரமணியன், மருதுபாண்டி யர் கல்லூரி முதல்வர் மா.வி ஜயா, துணை முதல்வர் ரா.தங்க ராஜ், மூத்த வழக்குரைஞர் சுப்பிர மணியன், விஞ்ஞானிகள் அப்துல் ரஹ்மான், ஞானப்பிர காசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.