districts

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி முதல்வருக்கு நன்றி தெரிவித்த விடுதி மாணவர்கள்

திருச்சிராப்பள்ளி, அக்.25 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும்,  கல்வி பயின்ற மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி  பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில் திருச்சி கலையரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மற்றும்  கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் கள் வாழ்க்கை வழிகாட்டி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன்மூலம் தாங்கள் பயனடைந்துள்ளதாக கூறிய மாணவ, மாணவி கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரி வித்தனர்.  அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த மாணவி சர்மிளா கூறுகையில், “திருச்சி  மாவட்டம் துவாக்குடியில் படித்து வருகிறேன். எனது அப்பா, அம்மா இருவரும் கூலி வேலை  செய்து வருகின்றனர். வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் எனக்கு தெளிவு கிடைத்தது. நான் படித்து முடித்து, அடுத்தது எவ்வாறு போட்டித்  தேர்வுக்கு என்னை தயார்படுத்திக் கொள்வது  என்றும் தெரிந்து கொண்டேன். முதலமைச்ச ருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.  பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டைக்குடி யைச் சேர்ந்த செ.பாக்கியலெட்சுமி கூறு கையில், “திருச்சி நவல்பட்டு கல்லூரியில் படித்து  வருகிறேன். எங்கள் வீட்டில் அம்மா-அப்பா இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மூலம், போட்டித் தேர்வுகளை எவ்வாறு அணுகுவது என்ற விபரம் முழுவதுமாக எனக்கு கிடைத்தது. எதை  படிக்க வேண்டும் எப்படி தேர்வு செய்து படிக்க  வேண்டும் என்ற எனது சந்தேகம் தீர்ந்து விட்டது. இது போன்ற நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார்.  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செ. பிரதாப் கூறுகையில், “திருச்சி துவாக்குடியில் படித்துக் கொண்டு விடுதியில் தங்கியுள்ளேன். எனது அப்பா விவசாயி, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி சரியான திட்டமிடலோடு, எவ்வாறு உழைக்க வேண்டும் என்ற விபரத்தை எனக்கு முழுமையாக அளித்தது. சாதிக்க விரும்பும் என்னை போன்ற இளைஞர்களுக்கு இது மிக வும் பயனுள்ள நிகழ்ச்சியாகும். இனிமேல் நாங்களும் இதுபற்றி தெரியாதவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை தெரிவிக்க இயலும்.  இந்நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச் சருக்கு நன்றி” என்றார்.