districts

தோட்டக்கலைத்துறை மானியத் திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

புதுக்கோட்டை, மே 2-  

  புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் செயல்  படுத்தப்படும் மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணைய தளத்தில் பதிவு செய்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்ததாவது:

  நடப்பு 2023-24-ஆம் நிதி ஆண்டில் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை, தமிழ்நாடு பாசன  வேளாண்மை நவீனமயமாக்கல் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன.

  மேற்கூறிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் https://tnhorticulture.tn.gov.in/tnhortneth என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் மானியங்கள் பெறலாம். பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருப்பின் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து பயனடையலாம்.

  பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். நடப்பு ஆண்டில் 98 கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய் யப்பட்ட இக்கிராம பஞ்சாயத்துகளுக்கு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.