districts

img

இல்லம் தேடி கல்வி மாநில கருத்தாளர் அரசுப் பள்ளியில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, ஏப்.29 - இல்லம் தேடிக் கல்வி மாநில ஒருங்கிணைப்பாளரும், இல்லம் தேடி கல்வி புலனத்தின் நிர்வாகியுமான பாலா,  கீழரண் சாலையில் இயங்கும் மாநகராட்சி தொடக்கப் பள்ளி யில் நடைபெறும் இகேஒய்சி பணியை பார்வையிட்டார்.  இப்பணியில் சந்தித்த சிரமங்கள் குறித்து தன்னார்வலர் களிடம் கேட்டு விளக்கம் பெற்றார். காலை உணவுத் திட்டம் (ருசி தரம் மற்றும் விருப்பம்) குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் தன்னார்வலர்களையும், ஆசிரி யர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் பாராட்டினார். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆசிரியர் ஒருங்கி ணைப்பாளர் கணேசன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் இளஞ்சேட் சென்னி, திருச்சி நகர ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, தலைமை ஆசிரியர் (பொ)  பிரஜித் மற்றும் உதவி ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி  தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.