districts

வழக்கு விபரங்களை சிறைக்கைதிகள் பார்க்கும் வசதி தமிழக அரசின் சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை, ஏப்.27- தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் தங்கள் வழக்கு, தண்டனை உள்ளிட்ட விவ ரங்களை பார்க்கும் வகையில் தமிழ் மொழி யில் முதன் முறையாக தொடு திரை இயந்தி ரம் அமைக்கப்பட்டுள்ளதற்கு, மிகவும் பய னுள்ள முன்னெடுப்பு என்று,தமிழக அரசின்  சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டி யுள்ளது.  இதுகுறித்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது மகன் சொக்கர்,  விடுதலை தேதிக்கு பின்னரும் சட்டவிரோத மாக. 9 மாதம் காவலில் வைக்கப்பட்டு இருந்  தார். இதற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசார ணைக்கு வந்த போது உரிய இழப்பீடு  வழங்கப்பட்டு உள்ளது. என தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு  மீண்டும் வெள்ளியன்று நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சிறைத்துறை மற்  றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் ஜென ரல் மகேஸ்வரன் தயாள் பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில், இதற்கு முன் சென்னை புழல் சிறையில் மட்டும், கைதிகள் தங்கள் வழக்கு விவரங்கள் அனைத்தையும் பார்க்கக் கூடிய வசதியுடன் கூடிய தொடு திரை இயந்தி ரம் நிறுவப்பட்டு இருந்தது. இதில் இந்தி,  ஆங்கில மொழியில் மட்டும் தகவல்களை தொடு திரையில் பார்க்க முடியும். ஆனால்  தற்போது சிறை கைதிகளின் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகளி லும், 5 பெண்கள் சிறைகள் , புதுக்கோட்டை  மாவட்ட சிறையிலும் சிறை கைதிகள் தங்  கள் விவரங்களை பார்க்கும் வகையில் தொடு திரை ( Kiosks ) இயந்திரம் பொருத்  தப்பட்டு உள்ளது. குறிப்பாக புழல் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறைகளிலும் நிறுவப்பட்டு உள்ள  தொடு திரை இயந்திரத்தில் தமிழ், ஆங்கி லத்திலும் பார்க்கும் வகையில் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த தொடு திரையில் தமிழ் மொழியில்,  கைதிகளின் சுயவிவரம், விடுதலை தேதி, வழக்கு விவரங்கள், ஊதியம் போன்ற விவ ரங்களைத் தெரிந்துகொள்ள, பிராந்திய மொழியுடன் கூடிய கியோஸ்க்களை முதல்  முறையாக அமைக்கப்பட்டு உள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிறை கைதி களுக்கு மிகவும் பயனுள்ள முன்னெடுப்பு என்றும் தமிழக அரசின் சிறைத்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.