அய்யம்பேட்டை, ஜன.13- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் செவ்வந்திப் பூக்கள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மேல உத்தமநல்லூர், பூஞ்சேரி, இலுப்பக்கோரை, மாத்தூர், வீரசிங்கம்பேட்டை, ஈச்சங்குடி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை யையொட்டி செவ்வந்திப் பூக்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மேல உத்தமநல்லூர் கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி பரணிகுமார் கூறு கையில், ‘‘இப்பகுதியில் விளையும் செவ்வந்தி பூக்கள் தஞ்சை, கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு விவசாயி சுமார் 100 குழி (ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு) மட்டுமே, செவ்வந்திப் பூ விவசாயம் செய்ய இயலும். இதற்கு நடவு முதல் அறுவடை வரை ரூ.1 லட்சம் வரை செல வாகும். தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்றால் மட்டுமே செலவு செய்தது போக விவ சாயிகளுக்கு சிறிதளவு லாபம்கூட கிடைக் கும். திண்டுக்கல், சேலம், ஓசூர், ராயக் கோட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பூக்களாலும் விலை குறைந் துள்ளது. இருப்பினும் பூக்களின் விற்ப னையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் தோறும் பூக்கள் சந்தை அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.