மயிலாடுதுறை, பிப்.21- அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாட்கள் வழங்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டப் பொருளாளர் ஜி.லெட்சுமி, செம்பை ஒன்றிய அமைப்பாளர் ராஜாபிள்ளை ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் ஏ.சாமியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பேராவூரணி மற்றும் சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் வின் சென்ட் ஜெயராஜ், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியப் பொறுப்பாளர் செந் தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலை வர் மேனகா விளக்கிப் பேசினார். பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.மணிகண்டன் தலைமை வகித்தார். திருவோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொரு ளாளர் கோ.ராதிகா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுக்கூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலை வர் கே.கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரத்தநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் யூ.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்ப கோணம் ஒன்றியப் பொறுப்பாளர் காமாட்சி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாட்கள் வழங்க வேண் டும், 4 மணி நேர வேலை, தனி என்எம்ஆர், முழு கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் ஊராட்சி ஒன்றிய ஆணை யர், வட்டார வளர்ச்சி அலுவலர் களிடம் வழங்கப்பட்டது.