districts

மாதர் சங்க பேரவை

நாகப்பட்டினம், ஏப்.22-

   நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நடுக்கடையில் நடைபெற்ற மாதர் சங்க பேரவைக்கு ஜீ.எஸ்.ஜேஸ்பின்ராணி தலைமை வகித்தார்.

   பேரவையில், மாவட்டத்தில் மாதர் சங்க செயல்பாடுகள், எதிர்காலப் பணிகள் குறித்து மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜே.தமிழ்ச்செல்வி பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.மாதவி நன்றி கூறினார்.

  பேரவையில், ஒன்றியத் தலைவராக ஜீ.எஸ்.ஜோஸ்பின் ராணி, செயலாளராக எம்.விமலா, பொருளாளராக பி.செசெல்வகுமாரி உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.