districts

img

பசுமை முதன்மையாளர் விருது வழங்கல்

தஞ்சாவூர், ஜூன் 26-  

    தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலை மையில் நடைபெற்றது.

   கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உத வித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்  கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர்.  

   அதனைத் தொடர்ந்து கவின்மிகு தஞ்சை இயக்கம் திரு மங்கலக்கோட்டை, கீழையூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை முனைவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது’  மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    மேலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், “முதி யோர்கள் நலன் பாதுகாப்பில், இளைய சமுதாயத்தின ரின் பங்கு” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி னார்.