தேனி, பிப்.15- ரியல் எஸ்டேட் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து, தனியா ருக்கு பாலம் கட்ட அனுமதி வழங் கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: போடி வட்டம், பூதிப்புரம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்ட கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தனிநபர் பாலம் கட்டிக்கொள்ள அதிமுக ஆட்சியில் அனுமதி வழங் கியது. அந்த கட்டுமான நிறுவனம் தனது விவசாய நிலத்திற்கு செல்ல பாதை வேண்டும் என தவறாக தக வலை அளித்ததன் பேரில் பாலம் கட்டிக்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள் ளனர். ரியல் எஸ்டேட் கொள் ளைக்காக விவசாய நிலங்களை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, பாலத்தை காட்டி கூடுதல் லாபத்தில் விற் பனை செய்யவே தனியார் கட்டு மான நிறுவனம் பாலம் அமைத்துள் ளது. தண்ணீர் வசதிகளுடன் விவ சாயம் செய்த இந்த நிலங்களை வரு வாய்த்துறை, பேரூராட்சி, நகர மைப்பு அதிகாரிகள் பெருமளவு லஞ்சத்தை பெற்றுக்கொண்டு அனு மதி வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களை மனைப்பிரிவாக மாற் றும் போது வேளாண் உற்பத்தி அழி வதோடு, உயிர் வாழ் இனங்கள் அழி யும் சூழலும் ஏற்படுகிறது. இது குறித்து மாநில முதலமைச் சர், நீர்வளத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், வேளா ண்மை உதவி இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் கட்சியின் சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டு பாலம் கட்ட வும், வீட்டு மனைப்பிரிவுக்கு அனு மதி வழங்கிய நீர்வளத்துறை அதி காரிகள், வருவாய்த்துறை அதி காரிகள், நகரமைப்பு அதிகாரி கள், பேரூராட்சி உதவி இயக்குநர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சம்பந் தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உள்ளடக்கிய உயர் மட்ட விசாரணை நடத்தி காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளனர்.