districts

img

டெல்டா மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம்

கோபி, ஜன.27- தாழ்குனி ஊரட்சிக்கு வேளாண் திட்டங்கள் குறித்து  தகவல் அளிக்காமல், வேளாண்துறையினர் தன்னிச்சை யாக செயல்படுவதாக விவசாயிகள் கிராமசபைக் கூட்டத் தில் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள தாழ்குனி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி செந்தில்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் சோமசுந்தரம் ஊராட்சி சார்பில் நிறை வேற்றிய திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகள்  குறித்து வாசித்தார். இதனையடுத்து தாழ்குனி ஊராட்சி யில் வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணி கள் குறித்து, விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. அதில், தாழ்குனி ஊராட்சி வறட்சியான பகுதி என்பதால்,  வரும் காலத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்தில் சீரான குடிநீர் வழங்க  வேண்டும். புதிதாக 30 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். புதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ஊராட்சியில் விடுபட்ட கிராமங்களில் தார்சாலை வடிகால் வசதியை ஏற்ப டுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தீர்மானக்கப்பட்டன. மேலும், வேளாண்துறை சார்ந்த திட்டங் களை செயல்படுத்த நம்பியூர் வேளாண்துறை அதிகாரி கள் தாழ்குனி ஊராட்சிக்கு முறையான தகவல்களை  தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட் டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்,  வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு, பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று,  அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 46 புதூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஆசிரியர் நகர் பகுதியில் சாலை வசதி வேண்டி மனு அளிக்கப்பட்டது.