districts

அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 25 -

     புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ-மாணவியர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில்  குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7 ஆம் வகுப்பு தேர்ச்சி யும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்க லாம். பயிற்சிக் காலம்-3 ஆண்டுகள். பயிற்சி நேரம்-காலை  10 மணி முதல் மாலை 4 மணி வரை. பயிற்சிக் கட்டணம்-ரூ.350.

   அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில், அரசுத் துறையில் வேலைவாய்ப்புகளும் வானொலி, தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்பு கள் மற்றும் இலவசப் பேருந்து சலுகை, தங்கும் வசதி மற்றும்  கல்வி உதவித்தொகை அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப் படும். மேலும் அரசு விதிகளின்படி மாணவர்களுக்கு மிதி வண்டி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.

    எனவே ஆர்வமுள்ள மாணவ-மாணவியர் மாவட்ட அரசு  இசைப்பள்ளி புல எண்.29/70 லட்சுமி நகர், நரிமேடு, சமத்துவபுரம் வழி, புதுக்கோட்டை - 622005 என்ற முகவரி யில் தலைமையாசிரியரை நேரில் அணுகவும். மேலும் விப ரங்களுக்கு 04322-225575, 9486152007 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.