தஞ்சாவூர், பிப்.10- தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை சார்பில், தஞ்சா வூர் திலகர் திடலில் சனிக்கிழமைய தலைக் கவசம் மற்றும் இருக்கை பட்டை அணிதல் குறித்த விழிப்புணர்வு வாகனப் பேரணி நடை பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு வாகனப் பேரணியில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப் பட்ட இப்பேரணியில், வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர் கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையா ளர்கள், வாகன விற்பனை முகவர்கள், இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், காவல்துறை, உரிமம் பெற வந்திருந்த பொது மக்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், 50-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர். இப்பேரணி தஞ்சாவூர் திலகர் திடலில் துவங்கி, சோழன் சிலை, பெரியகோவில், மேம்பாலம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், ராஜப்பா நகர், குந்தவை நாச்சி யார் கல்லூரி வழியாக ஐடிஐ மைதானத்தில் நிறைவு பெற்றது. பேரணியில், பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் நெகி ழியை தவிர்த்து, சாலைப் பாதுகாப்பு வாசகங் கள் அடங்கிய மஞ்சப் பையை வழங்கினார்.