தஞ்சாவூர், ஜன.18- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திராஜன் பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் பயன் பாடின்றி பாழாகி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலை சீரமைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்தி ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மல்லிப் பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்ற னர். இந்த பள்ளி விளையாட்டு மைதானம் தான் முக்கியமான விளையாட்டு மைதான மாக இருக்கிறது. திடல் முறையான பராமரிப்புகள் இன்றி காணப்படுவதால், பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத் திடலை பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் மண்டியுள்ளன. இதனால் விஷப்பூச்சிகள், பாம்புகள் சுற்றித் திரிகின்றன. கிராம சிறு வர்கள், இளைஞர்கள் விளையாடவும், உடற் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடாமல் இணையவழி விளை யாட்டுகளிலே மூழ்கிக் கிடக்கின்றனர். அதனை மாற்றிடும் வகையில், விளை யாட்டு மைதானங்களை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமுதாய நல மன்ற அமைப்பு மை தானத்தை சீரமைத்து கொடுத்தது. ஆகவே பள்ளி மாணவர்கள் போட்டி விளையாட்டுகளுக்கு தயார் ஆகும் வகையி லும், பெரியவர்கள், பொதுமக்கள் உடற் பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், அனைவரும் பயன்பெறும் வகையிலும் நவீன விளையாட்டுத் திடலாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது முன்னாள் விளை யாட்டு வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.