மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி குழு சார்பில் அரசு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பி. ராமமூர்த்தி நினைவு கொடி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா பகுதி செயலாளர் கே.வேலன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் கொடியை அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஏற்றி வைத்தார். மாநில குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார் கல்வெட்டை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி அரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.