கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (48). இவர் கடந்த மாதம் உடையார்பாளையம் சாலை திரௌபதி அம்மன் கோயில் செல்லும் வழியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செந்துறை காவல்துறையினர், பால்ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1,100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே குவாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்றது தொடர்பான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி உத்தர விட்டார். இதையடுத்து பால்ராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப் பட்டார்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
கந்தர்வக்கோட்டை,பிப். 17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத் திற னாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடை நிலை) ரமேஷ், உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன் ஆகியோர் அடையாள அட்டையினை வழங்கினர். நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஸ்டாலின், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலு வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், பைகள் வழங்கல்
பாபநாசம், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம் பேட்டை உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 125 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா காலணிகள், பைகளை பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி வழங்கி னார். இதேப் போன்று இப் பள்ளி முன்னாள் மாண வரும், சிங்கப்பூர் குடி மகனுமான ஹரிதாஸ், தனது மனைவி கஸ்தூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 125 பேருக்கு சீருடைக்கான துணியை வழங்கினார்.
புதிய பொது விநியோக கட்டிடம் திறப்பு
அய்யம்பேட்டை, பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த செரு மாக்கநல்லூரில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது விநி யோக கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா திறந்து வைத்தார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், செருமாக்க நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு மனவள பயிற்சி
அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன. விழாவிற்கு ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் இராசாத்தி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க, நற்சிந்தனையுடன் கற்றலில் மேம்படுத்திக்கொள்ள மனவள மற்றும் தற்காப்புகலை பயிற்சி 3 மாத கால அளவில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் குழு அமைத்து கட்டணமின்றி அங்ககச்சான்று பெறலாம் விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்
கும்பகோணம், பிப்.17- பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் குழு அமைத்து கட்டணமின்றி அங்ககச் சான்று பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமதுபாருக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் அங்ககச்சான்று பெறலாம். இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள் நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம். குறைந்தபட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்ககமுறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழி படிவம், பண்ணை விவரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் உள்ளூரை சேர்ந்த நபர் என்பதால் இயற்கையில் விளைந்த பொருள் என்ற நம்பகத் தன்மை வாங்குபவர்களுக்கு ஏற்படும். நுகர்வோர்கள் இடைத்தரகர் இன்றி பண்ணையிலேயே பெற்றுக்கொள்ளலாம். எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம்‘’ என தெரிவித்துள்ளார்.