districts

திருச்சி முக்கிய செய்திகள்

காந்தி மார்க்கெட்  தொழிலாளி தற்கொலை

திருச்சிராப்பள்ளி, அக்.5 - அரியலூர் மாவட்டம் ஒத்தகோவில் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர்  திருச்சி காந்தி மார்க்கெட் டில் கூலி தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார். பின்னர், இவர்  திருச்சி கீழதேவதான புரம் குருசாமி நகரில் கடந்த 10 நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் வீட்டில்  யாரும் இல்லாத நேரத் தில் தூக்கிட்டு பால கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று பால கிருஷ்ணன் உடலை கைப் பற்றி உடற்கூறாய்வுக் காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். கோட்டை  போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

கும்பகோணம்,   அக்.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள நாச்சியார்கோ வில் லயன் சங்கத்தினர் பல்வேறு நலத் திட்ட, சமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் இந்த வாரம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சேவை வாரமாக கடைப்பிடித்து, வெள்ளி யன்று 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 130  தலைக்கவசங்களை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர். அதன்பின், முக்கிய சாலைகள் வழியாக சாலை பாதுகாப்பு துண்டு  பிரசுரங்கள் வழங்கி விழிப் புணர்வு பேரணியாக வந்தனர். நிகழ்ச்சிக்கு நாச்சியார்கோவில் லயன்  சங்க தலைவர் தங்க வேல் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தின ராக லயன் சங்க மாவட்ட ஆளுநர் சவுரிராஜ், திரு விடைமருதூர் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜே. கே.ராஜு, நாச்சியார் கோவில் பெண்கள் அரசி னர் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் அல்லி, நாச்சியார்கோ வில் காவல் நிலைய ஆய் வாளர் ராஜேஷ் உள்ளிட் டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மின்னல் தாக்கி  மீனவர் காயம்

தஞ்சாவூர், அக்.5 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங் குடா கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கார்மே கம். இவரது மகன்கள்  பிரபாகரன் (38), காளி தாஸ் (35). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு  10:30 மணிக்கு சேதுபாவா சத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து, ஐந்து நாட்டிகல் கடல் மைல் தூரத்தில், தங்களுக்கு சொந்தமான ஃபைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது திடீ ரென்று மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மின்னல் தாக்கியதில் காளிதாசுக்கு காயம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, உட னடியாக அவரது அண்ணன் பிரபாகரன் படகுடன் கரைக்கு கொண்டு  வந்தார். பின்னர் அங்கி ருந்து ஆம்புலன்ஸ் மூலம்  சனிக்கிழமை அதிகாலை  2 மணிக்கு, பட்டுக் கோட்டை தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கும்பகோணம் அரசு அலுவலகங்களில்  லிப்ட் வசதி செய்து தர கோரிக்கை

கும்பகோணம், அக்.5 - கும்பகோணத்தில் ஒன்றிய - மாநில அரசு மற்றும்  பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழு சார்பில் உலக முதியோர் தின கருத்த ரங்கம் நடைபெற்றது. உலக முதியோர் தினத்தையொட்டி கும்பகோ ணத்தில் ஒன்றிய - மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  சார்பில், முதியோர் தின கருத்தரங்கம் ஒருங்கி ணைப்பாளர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்றது.  கருத்தரங்கில் கும்பகோணம் வட்ட தலைவர் துரை ராஜ் வரவேற்றார். எல்ஐசி சேகர், பிஎஸ்என்எல் பக்கிரி நாதன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதியோர்களும் சமூக மாற்றமும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் கருத்துரை ஆற்றி னார். கும்பகோணம் மாநகராட்சி, வட்டாட்சியர் அலு வலகம், மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங் களில் முதியவர்கள் படி ஏறிச் செல்ல வசதியாக லிப்ட்  வசதிகள் மற்றும் நடைபாதைகள் அமைக்க வேண்டும்.  கும்பகோணம் நகரத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகத் தினை இணைத்து வட்ட பேருந்து வசதி ஏற்படுத்திட போக்குவரத்து நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருட்டு வழக்குகளில் 5 பேர் கைது:  தங்கம், வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை, அக்.5 -  திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட் டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதி களில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளி களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசா ரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சேர்ந்த  தேவா (58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (44), ஆவுடையார்கோ வில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகர் அலஞ்சரக்காடு சொக்க லிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெரு வைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக்  கட்டி, 5.750 கிலோ எடையிலான வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இருசக்கர வாக னங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப் பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப் பட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையி னரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு  இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

திருச்சிராப்பள்ளி, அக்.5 - திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2327 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வினை போட்டித் தேர்வர்கள் சிறப்பாக  எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் 14.10.2024 (திங்கள்கிழமை) முதல் காலை 10 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறப்பு பயிற்றுநர்களை  கொண்டு அனைத்துப் பாடப் பகுதிகளுக்கும் பயிற்சியளிப்ப துடன், மாநில அளவில் பாடவாரியாக மாதிரித் தேர்வு கள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப் படும். எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த குருப் -2, 2ஏ முதல்நிலைத் தேர்வினை எழுதிய அனைத்து போட்டித்  தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடை யலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

ஏட்டு, போலி டிஆர்ஓ கூட்டாளிகள் கைது கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது அம்பலம்

திருநெல்வேலி,அக். 5- தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ்( 41). இவர் நெல்லை மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பாளை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார்.        இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த வளர்மதி(40) என்ற பெண்ணுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்மதிக்கு நெல்லையில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து தங்க வைத்த முருகராஜ், அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகராஜ் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக வளர்மதியை பயன்படுத்தி வந்துள்ளார். அதன்படி சமீப காலமாக வளர்மதி மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி பலரிடம் பணத்தை கறந்து வந்துள்ளார். நிலத்திற்கான பட்டா பெற்று தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி 2 பேரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சசிகுமார்(40) என்பவருக்கு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா மாறுதல் வாங்கி தருவதாக வளர்மதி கூறியுள்ளார். இதனால் அவரை நம்பி ரூ.10 லட்சம் பணத்தை சசிகுமார் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை.  இதுகுறித்து வளர்மதியிடம் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் முருகராஜிடம் அவர் தெரிவித்துள்ளார்.  அதன்பின்னர் முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாரிடம் கொடுத்துள்ளார்.  அதை வாங்கிய சசிகுமார் தனது வங்கி கணக்கில்  போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதைதொடர்ந்து அவர் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, வளர்மதி போலி டி.ஆர்.ஓ. என்பதும், தலைமை காவலர் முருகராஜூடன் சேர்ந்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததையும் அவர் அறிந்தார். இதுகுறித்து  நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார். இதில் வளர்மதி மற்றும் முருகராஜ் ஆகியோர் சேர்ந்து பலரிடம் கோடி ரூபாய் அளவில் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பேரில் முருகராஜ் மற்றும் வளர்மதி ஆகியோர் கைது  செய்யப்பட்டனர்.

கடையநல்லூர் அருகே 4 காட்டு யானைகள் முகாம்

தென்காசி, அக். 5- கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர் பண்பொழி, வாவா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் இரவு நேரங்களில் வயல்களில்  அடிக்கடி புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி உணவு உட்கொண்ட பின் அதிகா லையில்  வனத்திற்குள் சென்று விடுவது வழக்கம். ஆனால் காலை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள கல்குளத்தில் 4 யானைகள் நிற்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, யானையை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். பின்னர் வனத்துறையினர்   கல்குளத்தில் முகாமிட்டு வெடி வெடித்து சைரன் மூலம் ஒலி எழுப்பி யானையை தீவிரமாக விரட்டும் முயற்சியில்  ஈடுபட்டனர்  இருப்பினும் யானைகள் வனத்துக்குள் செல்ல மறுத்து கல் குளத்திலே முகாமிட்டுள்ளது மாலை 6 மணி வரை இந்த யானைகளை குளத்துக்குள்ளேயே வனத்துறையினர் பாதுகாப்பாக நிற்க வைத்தனர். பகல் நேரங்களில் யானைகளை விரட்டினால் அது கலைந்து ஊருக்குள் சென்று விடும் என்பதற்காக இரவு வரை நான்கு யானைகளையும் குளத்திலேயே பாதுகாப்பாக வைத்து விட்டு இரவு நேரத்தில் வனத்துக்குள்  வெடி வெடித்து யானை கூட்டத்தை அனுப்பினர்.