தஞ்சாவூர், ஜூலை.10 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினத் தைச் சேர்ந்தவர் மீனவர் அந்தோணி. இவர் சக மீன வர்கள் மூன்று பேருடன் கடந்த 15 தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென் றார். அப்போது காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்தது. இதில், மூன்று மீனவர் கள் காப்பாற்றப்பட்டு கரை சேர்ந்த நிலையில், அந்தோ ணியின் நிலை என்ன வென்று இதுவரை தெரிய வில்லை. அந்தோணி இல் லாத நிலையில் அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, புதன்கிழமையன்று மல்லிப் பட்டினம் சென்று மீனவர் அந்தோணியின் குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறி னார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளித்தார். அப்போது சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றி யக் குழு தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிபட்டினம் தாஜுதீன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலாபேகம் முகமது அலி ஜின்னா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், தென்னங்குடி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.