districts

img

பேராவூரணியில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் திறப்பு

தஞ்சாவூர், பிப்.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே, ‘ழ’ பவுண்டே சன் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு, இயற்கை விவசாயிகள் லீக் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.   இலவச பயிற்சி மையத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற கடலூர் ஆட்சியர் வெ.  அன்புச் செல்வன், பயிற்சி துணை ஆட்சியர் விஷ்ணுபிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் விக்னேஷ் நோக்கவுரையாற்றினார்.  ‘ழ’ பவுண்டேசன் நிறுவனர், கார்க்கி அசோக்குமார் தலைமை வகித்து பேசுகையில், “தஞ்சை மாவட் டத்தின் கடைக்கோடி பகுதியான பேரா வூரணியில் உள்ள மாணவ, மாணவி கள் வெளியூர் சென்று நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவு செய்து, இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கோ, அரசுப் பணிகளுக்கோ படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து பயிற்சிகளையும் இலவசமாக பெறும் வகையில், பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் அறி வுறுத்தலின்படி,  ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.  திறன் மேம்பாடு, தொழில் ஆராய்ச்சி குறித்தும் மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி மையம் மூலம் இணையவழி பயிற்சி வழங்கப்படும். பின்தங்கிய நமது பகுதியில் இருந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர் களாக, அரசு உயர் அலுவலர்களாக வரும் காலங்களில் தேர்வு செய்யப்படு வதை, உறுதி செய்யும் வகையில் ‘ழ’ பவுண்டேஷன் செயல்படும்” என்று தெரிவித்தார்.   இதில், வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் இலக்கியா நெப்போலியன், அலிவலம் மூர்த்தி, வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, மருத்துவர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி பட்டுக்கோட்டை விஜயகுமார், நடராஜன், பன்னீர்செல்வம், நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக இயற்கை விவசாயி கள் லீக் போட்டியில் வெற்றி பெற்ற  அலிவலம் சுரேஷ் என்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.