districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலவச மருத்துவ முகாம் 

தஞ்சாவூர், நவ.17 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், பேரா வூரணி கோக்கனட் சிட்டி  இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் மற்றும் நாமக் கல் எம்.எம். மருத்து வமனை இணைந்து பேரா வூரணி ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில், மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு தேய்மானம் இல வச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினர். இம்முகாமுக்கு ஸ்டார் லயன்ஸ் சங்கத்  தலைவர் சி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கச் செயலாளர் ஜி. குமரன் வரவேற்றார். பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், ஸ்ரீ விநாயகா ஜூவல்லர்ஸ், திருமண மஹால் உரிமை யாளர் இ.வீ.சந்திரமோ கன், நாமக்கல் எம்.எம்  மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.சிவக்குமார் ஆகியோர் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர். மருத்துவமனை ஒருங்கி ணைப்பாளர் டி.நாகராஜ்  முகாமை ஒருங்கிணைத் தார். ஸ்டார் லயன்ஸ் சங்க  பொருளாளர் டி.சாமி யப்பன் நன்றி கூறினார்.  முகாமில் 456 பேர் சிகிச்சை பெற்றனர். இதில், 25 பேர் மேல்  சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர். 

வாக்காளர் சேர்க்கை  முகாமில் ஆய்வு

புதுக்கோட்டை, நவ.17 - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கைக்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு. அருணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந் துள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு  முகாம்கள் நடை பெற்றன.  இம்முகாம்கள் 23.11.2024 (சனிக் கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை  9 மணி முதல் மாலை 5  மணி வரை புதுக் கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந் துள்ள 1561 வாக்குச்சாவடி மையங்களிலும் நடை பெற உள்ளது.   இந்நிகழ்வுகளில், வட்டாட்சியர்கள் பெரிய நாயகி (ஆலங்குடி), திரு நாவுக்கரசு (அறந்தாங்கி)  மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்க விழா

திருவாரூர்/பாபநாசம், நவ.17 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மகிழ் முற்றம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அபிராமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.ரவி முன்னிலை வகித்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைப் பெயர்களில் மாணவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டது குறித்தும், மகிழ் முற்றம், மாணவர்களது படைப்பாளுமையை வெளிப்படுத்துவதற்கான தளம் என முதுகலை இயற்பியல் ஆசிரியர் இராம.சித்ரா பேசினார்.  பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திரநாத் தலைமை வகித்தார். ஆசிரியை கவிதா வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவி மஞ்சுளா, துணைத் தலைவி ஐஸ்வர்யா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் 219 பேர் 5 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிரியை சுபா நன்றி கூறினார். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். பள்ளி மாணவர்கள் 428 பேர் 5 குழுவாகப் பிரிக்கப்பட்டனர். குழுவாக இணைந்து செயல்படுதல், வேற்றுமையில்லாத உறவு, சமூக மனப்பான்மை, தலைமை பண்பு, நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல், ஆசிரியர் மாணவர் உறவு மேம்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு, விடுப்பு எடுப்பதை குறைத்தல் ஆகியவை மகிழ் முற்றத்தின் நோக்கமாகும்.

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி: நவ.19 தஞ்சையில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.17 -  கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் நவ.19 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்கப் பேரவை முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையி லான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.23 அன்று நடைபெற்றது. இதில், புதிதாக கடை  வாடகைக்கு 18 சதவீதம் வரி விதித்துள் ளதை ரத்து செய்ய வேண்டும்.  இந்த வரி விதிப்பு நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) இந்த  18 சதவீத ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை என்றும், சொந்த இடம்  வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும், ஒவ்வொரு சிறு வணிக ரும் கடைக்குச் செலுத்தும் வாடகை  தொகையில் 18 சதவீதம் மாதந்தோறும்  அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கார்ப்பரேட் முதலாளி களுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடி வாக உள்ளது. இது சில்லரை வணிகத்தை  அழிக்க முயற்சிக்கும் சதியாகும். இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை வலி யுறுத்தி நவ.19 அன்று தஞ்சாவூரில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. சங்க நிறுவனத் தலைவர் பி.ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எச்.அப்துல் நசீர், மாவட்டப் பொரு ளாளர் டி.ராஜா, மாநகரத் தலைவர் பி. சதீஷ், மாநகரச் செயலர் ஜி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்த  காளைக்கன்று உயிருடன் மீட்பு

தஞ்சாவூர், நவ.17 - பேராவூரணி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த காளைக்கன்றை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவியர் விடுதி பின்புறம் உள்ள வயல்வெளியில் சனிக்கிழமை மாலை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது பேராவூரணி பாந்தகுளம் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவருக்கு சொந்தமான ஒரு காளைக் கன்று வழி தவறி, அரசு பெண்கள் மாணவியர் விடுதி பின்புறம் சென்றது.  அங்கே இருந்த கழிப்பறை கழிவு நீர்த்தொட்டியின் மேல் ஏறியபோது காளைக்கன்றின் எடை தாங்காமல், சிமெண்ட்  சிலாப் இடிந்து காளைக் கன்று கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்தது.  இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் பேரா வூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீ.சீனிவாசன் தலைமையி லான வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் விரைந்து சென்று, துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் கயிறைக் கட்டி காளைக்கன்றை உயிருடன் மீட்டனர்.  தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கழிவு நீர்த் தொட்டிக்குள் சிக்கிய காளைக்கன்றை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.60 லட்சம் மோசடி: இளைஞர் கைது

தஞ்சாவூர், நவ.17 - வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.60 லட்சம் ஏமாற்றியதாக இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைக்குச் செல்ல முயற்சி  செய்யும் படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை குறி  வைத்து சிலர் பல்வேறு துறைகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.  இதை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையி னர் பல்வேறு முறைகளில் பொதுமக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர்  அருகே நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம், ஒரத்தநாடு நெடு வாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார்கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன் ஆகியோர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் அளித்த  புகார் மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி யைச் சேர்ந்த முருகானந்தம் (38) வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.40 ஆயிரம் வாங்கி, ஏமாற்றிவிட்டார்” என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிந்து, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, முருகானந்தத்தை கைது செய்தனர்.

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு: காவலர் பணிநீக்கம்

தஞ்சாவூர், நவ.17 - தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (38), அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றினார். இவர், கடந்த  2023 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவரின் வீட்டிற்கு  வினோத் அடிக்கடி சென்று தகாத வார்த்தையில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், திருநங்கையின் வீட்டிற்கு ஒருநாள் இரவு அத்துமீறி நுழைந்து  அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் விதமாக நடந்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கை, வினோத் மீது காவல்நிலை யத்தில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து, வினோத் மீதான குற்றச் சாட்டின் அடிப்படையில், துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதை யடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டில், வினோத் திருவோணம் காவல்நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், வினோத் முறை யாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணையில் வினோத் சம்பந்தப்பட்ட திரு நங்கைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருவோணம் காவல்நிலையத்தில் பணியாற்றி  வந்த வினோத்தை பணிநீக்கம் செய்து, தஞ்சை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.